If You Want More Stills..

Enter your email address:

Delivered by FeedBurner

TAMIL SEARCH

CLICK THIS.....

Tuesday, February 24, 2009

ஆஸ்கார் விருதுகள் தாய் நாட்டுக்கு சமர்ப்பணம்: ஏ.ஆர்.ரகுமான்

இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று, புதிய சாதனைப் படைத்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்த விருதுகளை தனது தாய்நாட்டுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்று வருகிறது.

இதில், 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தி‌ற்கு இசையமை‌‌த்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.

இந்த விருதுகளை பெற்றது குறித்து ஏ.ஆ‌ர்.ரகுமா‌ன் கூறுகையில், "மூன்று வாரங்களில் 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத்து முடித்தேன். லண்டனுக்கு சென்று இந்த பணியை செய்தேன். தற்போது இரட்டை ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது, இன்னும் பெரிய அளவில் நான் செயல்படுவதற்கு உதவும் என்று கருதுகிறேன்" என்றார்.

"இந்த இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் எனது தாய் நாட்டுக்கு சமர்பிக்கிறேன்" என்று மேலும் கூறினார் அவ‌ர்.

இரட்டை ஆஸ்கார் விருது பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Free Subscribe Get More...